Friday, April 22, 2011

எனது வாழ்த்துக்கள் தோழா..!


காலையில் சிரிக்கும்
சூரியனின் ஒளியையும்
மாலையில் சிரிக்கும்
சிட்டுக்குருவியின்
இனிமை ஒலியையும்
இரவில் சிரிக்கும்
நிலவின் அழகையும்
உன் புன்னகையில்
கண்டேன்..!
உன் கொஞ்சும்
பேச்சு
என் செவிக்கு
குயில் பேசுகிறதா
என வியப்பூட்டியது..!!
உன் மழலை
முகத்தில்
குழந்தையின் செல்லக்
குறும்பை ரசித்தேன்..!!!
உலகின் அதிசய
நிலவாய் தோன்றிய
என் செல்லமே
என்றும்
புன்னகையுடன்
வெற்றி நடைபோட
எனது
வாழ்த்துக்கள்..!!!!

நண்பா!!!!!



சூரியனைப் போல்
என் வாழ்வில்
உதயமானாய்..!
நிலவைப் போல்
என் வாழ்வில்
அழகானாய்..!!
விண்மீனைப் போல்
என் வாழ்வில்
மின்னுனாய்..!!!
ஆலமரம் போல்
என் மனதில்
இடம் பிடித்தாய்..!!!!
என் வெற்றிப்
படிகளுக்கு அடிக்கல்
நாட்டினாய்..!!!!!
என் வாழ்க்கைக்கு
திருப்பு முனையானாய்..!!!!!!
என் கவிதைகளுக்கு
எழுத்தானாய்..!!!!!!!
எனக்கு சிறந்த
நண்பனானாய்..!!!!!!!!
நட்புக்கு
இலக்கணமானாய்...!!!!!!!!!

Sunday, March 13, 2011

என் நட்புக்காக!!!!!

ஆயிரம் கசப்புகள்
மனதில்...
ஏன் எதற்கு
என புரியாமல்
விளிதெரியாமல்
விடையறியாமல்
வழியறியாமல் நடமாடினேன்...
என் விழிதிறந்து
விடையரிந்து
வழியறிந்து
என் கைபிடித்து
வழி நடத்திய
என் உயிர் நண்பனே
உன்னுடன்
என்றும் துணையிருப்பேன்!!!!!

கல்லோடைப்போரின் வாழ்கை!

கல்லோடைகும் சத்தம்
கேட்டேன்...
அவர்கள் உடல்
வலியை கண்டேன்...
அவர்கள் வாழ்கையை
கேட்டேன்...
அவர்கள் மன
வலியை கண்டேன்!!!!!

Friday, January 28, 2011

முதன் முதலாக !!!!!


சூரியன் வெளி வர
மொட்டுக்கள் மலர
அருவியில் நீர்த்துளிகள் கொட்ட
குழந்தைகள் தன் செல்ல
சிரிப்புடன் சிரிக்க
அக்காலை பொழுதில்
சந்தித்தேன் உன்னை
முதன் முதலாக !!!!!

காலையில் Shuttle பயணம் !!!!!


காலை 7 மணி ஆனால் போதும் பரபரப்புடன் அரக்கபரக்க கிளம்பி Shuttle லை வேக நடையுடன் நடந்து ஓடி நின்றால் அன்று தான் நம்ம Shuttle லேட் ஆகா வரும் சென்னை டிராபிக்கில் மாட்டி. ச்சச!!!!! பிகர் வந்ததே ஓடி வரும் போது,.. பிகர் மிஸ் ஆகிருச்சே மச்சி சரியா பார்க்காம.. "காத்திருந்து காத்திருந்து....." Shuttle லில் ஏறி நம்ம ரெகுலர் சீட்யில் அமர்ந்து காதில் ஹீட்செட் ஐ மாட்டினால் போதும், சொர்க்கம் தான்.. நம் தன்னந்தனி சிரிப்புடன் பயணிப்போம் நமக்கு பிடித்த நபரையும் நிகழ்சிகளையும் நினைத்துகொண்டு..... Parents வுடன் ஒரு ஹாய் ஹலோ குட் மோர்னிங் nu ஒரு போன் கால் போகும் வழியில்.. தலைமுடியை காய வைக்க கூட நேரம் இல்லாமல் அப்படி என்ன கிளிக்கிரோமோ தேரியவில்லை நாம், அதையும் Shuttle லில் தான்.. காதில் மெலோடீஸ் பாடல்களுடன் ஒரு நல்ல தூக்கம்.. தூக்கம் na தூக்கம் அப்படி ஒரு தூக்கம்.. அன்றாடும் ரயில்வே கேட்யில் மாட்டும் நம்ம Shuttle , நாம் குபேர தூக்கத்தில் இருக்கும் போது மட்டும் மாட்டாது..... பல சிக்னல்களை தாண்டி ஆபீஸ் கேட்யில்  நுழைகிறது Shuttle, சொர்க்கம் நரகமாகிறது அந்நொடி முதல்.....

Monday, December 27, 2010

கவிதை மடல்!!!!!


என் மரண படுக்கையில்
உனக்காக நான் எழுதிய
கடைசி மடல்.....
எனக்கு தெரியாமல் போனது
அது உனக்கு
நான் எழுதிய
கடைசி கவிதையென்று!!!!!

Sunday, October 17, 2010

லேசா லேசா !!!!!!!!!!

நீ அழைக்க!
என் மொபைல் ரிங்க்டோன் 
லேசா லேசா
என்று  லேசாக இசைக்க!!
என் உதடுகள் 
லேசாக இசைத்தது
மௌன புன்னகையில்!!!

My Clicks @ Dakshina Chitra

 

 
            
 

 


 

 

 

 

 

 

 

 

 

Sunday, September 26, 2010

நகரத்தில் நரக வாழ்க்கை



கிராமத்தில் இருக்கும் போது நகர வாழ்க்கை சொர்க்கம் என்று நினைக்கிறோம் உண்மையை அறியாமல். கிராமத்தில் இருப்பவர்கள் சாப்ட்வேர் என்ஜினியர் என்றால் கை நிறைய சம்பளம் என்று மட்டும் தான் எண்ணுகிறார்கள். ஆனால் இங்கு நம் நிலைமையோ  கொடுமையோ கொடுமை!!!!!!!!!!!! குடும்பம் இருந்தும் குதூகலம் இல்லாமல், பணம் இருந்தும் பயன் இல்லாமல், நகை இருந்தும் நகைச்சுவை இல்லாமல் இந்த நவரசமற்ற வாழ்கையை ரசனையற்று ரசித்து கொண்டு இருக்கிறோம். இது தேவையா என்று என்ன தூண்டும் தினமும் நம் மனதில்??????? எந்த நேரம் ஆபீஸ்கு போவோம் எந்த நேரம் ஆபீசில் இருந்து கிளம்புவோம் என்று தெரியாமல் காலையில் கண் விழிபோம். மனைவி காபி போட்டு  இருப்பால் என்று நினைத்து கண் விழிக்க மனைவிடம் இருந்து ஒரு குரல், மாமா காபி ரெடியா?? எனக்கு ஆபீஸ்கு நேரம் ஆச்சு. காபியின் சூட்டையைவிட சண்டை சூடாக ஆரம்பித்தது காலையிலே. 5 நிமிடம் தான்ஆகும் பயண நேரம் ஆனால் டிராபிக் என்னும் கொடுமையால் 5 மணி நேரம் பயணிப்போம் அந்த தூரத்தை. ஆபீஸ்கு  போனால் அங்கு அதற்கு மேல் தலைவலி,  என்று ஆபீஸ்சில் இருந்து சீக்கிரம் கிளம்ப வேண்டும் என்று நினைகிறோமோ அன்று தான் Issues , கிளைன்டுடன் கால்ஸ் என இடத்தை விட்டு நெகர முடியாத அளவுக்கு வேலை இருக்கும். லீவ் பேலண்ச இருந்தும் லீவ் எடுக்க முடியாமல் இந்தியாவில் இருந்து கொண்டு US , UK நேரத்தில் வேலை பார்த்து கொண்டு இருக்கிறோம். பொங்கல்,தீவாளிக்கு ஹொலிடே இல்லையாம் US , UK வில் திருவிழா என்றால் மட்டும் தான்  நமக்கு ஹொலிடே வாம். என்ன கொடும சார் இது!!!!!!!!!!!!!!!! குடும்பத்திலயும் குதூகலம் இல்லை  ஆபீசெலயும் நிம்மதி இல்லை இந்த நகரத்தில்(நரகத்தில்) எப்போதும் குழப்பமான மன நிலையில் நரக வாழ்கையை வாழ்ந்து கொண்டு இருக்கிறோம்.