Monday, June 20, 2011

சில கவிதை கிறுக்கல்கள்..!


என் மனம் கலங்க
என் கண்கள்  கலங்க
என் உதடுகள் துடிக்க
என் கைகள் மௌனமாக
அசைத்தது
உன்னை வெளிநாட்டிற்கு
வழியனுப்பியபோது.....
நீ என்று வருவாய்
என் கரம் பிடிக்க?????
உன் நினைவுகளுடன்
என்றும் நான்..!


என் சிரிப்பிற்கு பின்
மறைந்து இருக்கும்
கண்ணீரை
யாரால்
உணர முடியும்
உன்னை தவிர..!


இவ் உலகத்திற்கு
உன்னை காட்டிய
உன் பெற்றோருக்கு
நன்றி சொல்லவா???
இல்லை நீ தான்
என் உலகம் என்று
உன்னை காட்டிய
என் பெற்றோருக்கு
நன்றி சொல்லவா???
இருவருக்கும்
என் கோடான கோடி
நன்றிகள்..!